1.1.13

மரணத்திற்குப்பின்?



கேள்வி : மரணத்திற்குப்பிறகும் வாழ்க்கை உள்ளதா? 7 பிறவிகள் என்று சொல்லப்படுகிறதே அவை மனிதப்பிறவியோடு முடிவடைந்து விடுகிறதா? அல்லது அதற்குபிறகும் தொடருமா?

குருஜி :  மரணத்திற்குப்பிறகும் வாழ்க்கை உண்டு. நாம் திரும்பவும் வரவேண்டி இருக்கலாம்!  தொடர்ந்து மீண்டும் மீண்டும் வந்துகொண்டும் இருக்கலாம். அது எத்துனை முறையாக வேண்டுமானாலும் இருக்கலாம், 7 ஆகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை.


அனைவரையும் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொள்ளும்படி செய்ய ஏதேனும் வழி உள்ளதா?



கேள்வி : குருஜி நிறையபேர் வாழும்கலைப் பயிற்சி எடுக்கிறார்கள் ஆனால் ஏனோ பலர் இடையில் அவற்றை விட்டுவிடுகின்றனர்.  அனைவரையும் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொள்ளும்படி செய்ய ஏதேனும் வழி உள்ளதா?

குருஜி :  ஒரு நிலையான பயிற்சி மையம் இருந்தால் மக்கள்  தொடர்ந்து வருவார்கள் என்று நினைக்கிறேன். மேலும்  அம்மையங்களில் அவர்களுக்கு ஆன்மிகபுத்தகங்களையும்,  டேப், சிடி போன்றவைகளை வைத்திருப்பதும், சேவைத்திட்டங்களை செயல்படுத்துவதும்  மக்கள் தொடர்ந்து அங்குவந்து பயிற்சிகளை மேற்கொள்ள உதவும்.