5.5.14

படைப்பும் படைத்தவனும்


இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரே சக்தியினால் ஆனது  பொதுவாக, ஒன்று உருவாக்கப்படும் போது, படைப்பவனும், படைக்கப்பட்ட பொருளும் வெவ்வேறாகும். உதாரணமாக, நீங்கள் ஒரு மெழுகுவர்த்தியை உருவாக்கும் போது, இந்த மெழுகுவர்த்தி என்னிலிருந்து வேறுபட்டது என்று நினைப்பீர்கள்.அதனை உங்களிடமிருந்து பிரித்து வைப்பீர்கள். இது என்னுடைய படைப்பு இது நானல்ல என்று நினைப்பீர்கள். இப்படித்தான் படைப்பவன் ஆகிய இரண்டும் வெவ்வேறானவை என்று மக்கள் நினைக்கின்றார்கள்.

ஆனால் கடவுள் எங்கும் நிறைந்திருப்பவர் என்று சொன்னால் அவர் படைக்கப்பட்ட அந்த பொருளுக்குள்ளும் இருக்க வேண்டும். எங்கும் நிறைந்தது என்று ஒன்று சொல்லப்படும்போது அதை விட்டு வெளியில் வேறொன்று இருப்பதற்கான இடம் எங்கே இருக்கின்றது?

நான் அனைத்து சக்திகளையும் உடையவன் என்றால், என்னைவிட சக்தி வாய்ந்த ஒன்று இருக்க முடியுமா? வாய்ப்பே இல்லை. படைப்பு, படைப்பாளி என்பவை  இருவேறு பொருட்கள் இல்லை. இருப்பது ஒரே பொருள்தான். இதனை எப்படி புரிந்து கொள்வது? நடனம், நடனமாடுபவர் என்ற உதாரணத்தை எடுத்துக் கொண்டால், நடனமாடுபவரிடமிருந்து  நடனத்தைப் பிரிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. நடனம் பார்க்கவேண்டுமென்றால் நடனமாடுபவரின் மூலமாகத்தான் பார்க்க முடியும்.

ஒரு ஓவியனும் அவன் வரைந்த ஓவியமும் வெவ்வேறானவை. ஒரு ஓவியன் ஒரு ஓவியத்தை வரைந்துவிட்டு அங்கிருந்து சென்று விடலாம். அப்பொழுதும் அந்த ஓவியம் அதே இடத்திலேயே இருக்கும். ஆனால் ஒரு நாட்டியக்காரர் நாட்டியத்தை விட்டு விலகிச் செல்ல முடியாது. எனவே  படைப்பு , படைப்பவன் என்பது நடனம், நடனமாடுபவர் போன்றது கடவுள் அல்லது அன்பு அல்லது  ஒளி என்று நம்மால் அழைக்கப்படும் சக்தி இந்த வையகம்  முழுவதும் பரவியுள்ளது. இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளிலும் ஊடுருவி உள்ளது.இதுவே நம் பண்டைய ஞானத்தின் சாரம் ஆகும். நவீன அறிவியல் விளக்குவதும் அதையே தான். இந்த உலகம் முழுவதும் ஒரே சக்தியினால் ஆனது. இந்த உண்மை தத்துவ ஞானிகளின் பற்பல புதிர்களுக்கு தீர்வளிக்கும். - குருஜி

2 கருத்துகள்:

  1. It is very difficult to understand the creation. If there is a creation, there must be the beginning for creation. Obviously, the question will arise what was there before the creation? what was god doing before the creation? why he/she has created the universe?.... Questions brings out lots of questions... At the end we may realize that JUSTIFYING the purpose of creation is not at all necessary........ Life is a mystery to be lived not a problem to be solved.

    பதிலளிநீக்கு