17.10.11

சுதர்ஸன் கிரியா-தோற்றம்




பூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள், 1980 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் 10 நாட்கள் மௌனவிரதத்தில் இருந்தபொழுது சுதர்ஸன் கிரியா உதயமானது.


சுதர்ஸன் கிரியாவைப் பற்றி அவரே கூறுவதைப் பார்க்கலாம்,

“நான் உலகின் பலபகுதிகளுக்கும் சென்று மக்களுக்கு யோகா, தியானம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்து வந்தேன் எனினும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ மேலும் ஏதேனும் செய்யவேண்டும் என விரும்பினேன். எனென்றால் மக்கள் இவற்றைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலும் உலக வாழ்க்கை என வரும்பொழுது அவர்கள் வேறுவிதமாக இருந்தனர். அவர்களது வாழ்க்கை உள்ளும் புறமும் வேறுபட்டிருந்தது,  இங்கு, இருக்கவேண்டிய ஏதோ ஒன்று குறைவதாக உணர்ந்தேன்.  ஆகவே அவர்களது உள்ளார்ந்த அமைதிக்கும் உலகவாழ்க்கையில் அவர்கள் வெளிப்படும் விதத்திற்கும் எப்படி ஒரு இணைப்பை ஏற்படுத்துவது என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

10 நாட்கள் மௌனத்தில் இருந்தபொழுது ஒரு அகத்தூண்டுதலாக சுதர்ஸன் கிரியா தோன்றியது. இயற்கைக்குத்தான் எதைக் கொடுக்கவேண்டும், எப்பொழுது கொடுக்கவேண்டும் என்பது தெரியுமே. மௌனத்திலிருந்து வெளிவந்ததும், எவற்றையெல்லாம் நான் அறிந்துகொண்டேனோ அவற்றை மக்களுக்கு கற்றுக்கொடுக்கத் தொடங்கினேன், மக்கள் அற்புதமான அனுபவங்களைப் பெற்றனர்”
-ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

அது முதற்கொண்டு சுதர்ஸன் கிரியா – ஆற்றல்மிக்க, தாள ஒழுங்குடனமைந்த மூச்சுப்பயிற்சி, வாழும்கலையின் அனைத்து பயிற்சிகளிலும் முக்கிய இடத்தை வகிக்கிறது. முதல் வாழும்கலை பயிற்சி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் ஷிமோகாவில் வழங்கப்பட்டது.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் நமது பண்டைய ஞானத்தைத் தற்கால வாழ்க்கைக்குப் பயன்படும் விதத்தில் வடிவமைத்துத் தந்துள்ளார்.

சுதர்ஸன் கிரியா-அறிமுகம்




 சுதர்ஸன் கிரியா, டல், மனம், புத்தி, மற்றும் உணர்வுகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் தன்மையுடைய, இயற்கையாய் அமைந்த, மூச்சின் தாள ஒழுங்கைக் கொண்டது. இந்த தனிச்சிறப்புவாய்ந்த மூச்சுப்பயிற்சி நம்மிடமுள்ள மன இறுக்கம்,விரக்தி, மற்றும் எதிர்மறையான உணர்வுகளான கோபம்,சோர்வு,வருத்தம் ஆகியவற்றை வெளியேற்றி நம்மை அமைதியுடன் கூடிய உற்சாகத்துடனும், கவனத்துடன் கூடிய ஓய்வுடனும் வைக்கிறது.

மூச்சின்மூலம் உணர்ச்சிகளைக் கையாளுதல்

மனதுக்கும்,உடலுக்கும் இணைப்பாக மூச்சு செயல்படுவதை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நமது ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஏற்றபடி தனிப்பட்ட விதத்தில் நமது மூச்சின் தன்மை மாறுவதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

உதாரணமக நாம் கோபமாக இருக்கும்பொழுது நமது மூச்சு குறுகியதாகவும்,வேகமனதாகவும் இருந்தது

Angry: Your breath comes in short, quick cycles
கோபம்குறுகிய வேகமான மூச்சு

நாம் சோகமாக இருக்கும்பொழுது நமது மூச்சு ஆழமானதாகவும்,நீண்டதாகவும் இருந்தது 


Sad or upset: Your breath comes in long and deep cycles
சோகம்நீண்ட ஆழமான மூச்சு

இதன் மறுபக்கமும் உண்மையானது, அதாவது நாம் நமது மூச்சை ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஒழுங்குபடுத்தினால் அது அதனுடன் தொடர்புடைய உணர்ச்சியைத் தூண்டும். ஆகவே உணர்சிகளாள் ஆட்கொள்ளப்படுவதற்கு பதிலாக குறிப்பிட்ட விதத்தில் மூச்சை ஒழுங்குபடுத்தி அவற்றை நம்மால் மாற்றி அமைக்க முடியும்.

சுதர்ஸன் கிரியாவின் மூலமாக, நாம் மூச்சை திறமையாகப் பயன்படுத்தி, நமது உணர்ச்சிகளைக் கையாளமுடியும், மன இறுக்கத்துக்குக் காரணமான எதிர்மறை உணர்வுகளான கோபம், பதட்டம், சோர்வு, பயம் ஆகியவற்றை வெளியேற்றி மனதை அமைதியாக, ஆனந்தமாக, துடிப்புடன் வைத்துக்கொள்ள முடியும்.

மேம்பட்ட ஆரோக்கியம், நல்ல மனநிலை, சிறந்த வாழ்க்கை


சுதர்ஸன் கிரியா, நமது முழு உடல், மன அமைப்பில் உள்ள மாசுகளையும் சேர்ந்துள்ள இறுக்கத்தையும் வெளியேற்றி அதை ஒழுங்குபடுத்துகிறது.  நமது ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான புரோலாக்டின் ஹார்மோனின் அளவு முதல் முதலாக சுதர்ஸன் கிரியா பயிலும் போதே அதிகரிப்பதை ஆராய்ச்சிகள் உணர்த்துகின்றன (படத்தைக் காணவும்).


சுதர்ஸன் கிரியாவின் அற்புதமான ஆற்றலால், கிராமம்,நகரம் என்ற பாகுபாடுகளைக் கடந்து, பெரிய நிறுவன ஊழியர்கள், விவசாயிகள், இல்லத்தரசிகள், இளைஞர்கள், படை வீரர்கள், பெரும் துன்பங்களால் பாதிக்கப் பட்டவர்கள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள், சிறைவாசிகள் என அனைத்து விதமான மக்களும் என்னற்ற நற்பலன்களையும் மகிழ்ச்சியையும், நோயற்ற வாழ்க்கையையும் அடைந்துள்ளனர். 


சுதர்ஸன் கிரியா வின் பலன்கள் பற்றியும், நமது உடலில் மனதில் சுதர்ஸன் கிரியா செய்வதால் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய ஆய்வுகளையும் அறிய இதன்மீது க்ளிக் செய்யவும் 
                           








16.10.11

வாழும் கலைப் பயிற்சி பாகம்-1

மன இறுக்கம் நமது வாழ்க்கையை எந்தஅளவு பாதிக்கிறது என்பதை நாம் முழுமையாக உணருவதில்லை, அடிக்கடி நமது மனது கடந்து போன காலத்தை எண்ணி,கோபம்,வருத்தம்,வெறுப்பு ஆகிய உணர்வுகளில் சிக்கிக்கொள்கிறது, அல்லது எதிர் காலத்தைப் பற்றிய கவலை மற்றும் பயத்தில் மூழ்கி விடுகிறது. மனதின் இந்த ஊசலாட்டம் நம்மையும் நமக்கு நெருங்கியவர்களையும் மன இறுக்கத்தில் தள்ளி நமது செயல்திறனைக் குலைத்து,வாழ்கையின் தரத்தைக் குறைத்து விடுகிறது.

உடலையும்,மனதையும் இணைக்கும் ஆற்றலை உடையது மூச்சு, எனவே மனதை வயப்படுத்தி, எதிர்மறை உணர்வுகளைப் போக்கி,முழு ஆற்றலோடு வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக உணர மூச்சைக் கருவியாக்கும் கலை-வாழும்கலைப்பயிற்சி பாகம்-1 

பயிற்சியைப் பற்றி
  • 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும்
  • பொதுவாக 6 நாட்கள், தினமும் சுமார் 3  மணிநேரம், கடைசி 2 நாட்கள் மட்டும் அதிக நேரம்
  • அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் சவால்களை சந்தித்து வெற்றிபெற செயல்முறை ஞானம்
  • யோகா மற்றும், இறுக்கம் போக்கும் பயிற்சிகள்
  • எளிய தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள்
  • சிறப்புவாய்ந்த சுதர்சன்கிரியா  பயிற்சி
பயன்கள்
  • மன இறுக்கம் நீங்கி,புத்துணர்வு
  • ஆனந்தம்,உற்சாகம்
  • செயல்திறன் மேம்பாடு
  • தன்னம்பிக்கை,நோயற்ற வாழ்க்கை
  • மேம்பட்ட புரிதல் திறன்,முடிவெடுக்கும் திறன்
  • புத்துணர்வு,மேம்பட்ட அழகு


வாழும் கலைப் பயிற்சி பாகம்-2


வாழும் கலைப் பயிற்சி பாகம்-2, ஒருவர் தனக்குள் உள்ளாழ்ந்து செல்லவும்,மனதை அமைதிப்படுத்தவும்,ஆழ்ந்த ஒய்வையும்,அமைதியையும் அனுபவிக்கவும், வகைசெய்யும் விதமாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி ஆகும்

பயிற்சியைப் பற்றி
  • வாழும் கலைப் பயிற்சி பாகம்-1 பயின்றவர்களுக்கு மட்டும்
  • 4 நாட்கள்,அதிகாலை முதல் இரவு வரை,வீட்டிலிருந்தும் வ்ந்து செல்லலாம்
  • புத்துணர்வூட்டும் யோகா,மௌனம், சிறப்புவாய்ந்த தியானப் பயிற்சி
  • மேம்பட்ட சில மூச்சுப்பயிற்சிகள்
பயன்கள்

  • அன்றாட நிகழ்வுகளிலிருந்து ஒரு விடுமுறை
  • முழுமையான புத்துணர்வு மற்றும் புத்தாக்கம்
  • அமைதியான மனம்

முதுநிலை தியானப்பயிற்சி


முதுநிலை தியானப்பயிற்சியானது வாழும்கலை பாகம்-2 ஐப் போன்றதே, இது பொதுவாக 5 நாட்கள் தங்கி இருந்து பயிலவேண்டிய பயிற்சி,இப்பயிற்சி குருதேவரின் முன்னிலையில் வாழும்கலை பெங்களூரு ஆசிரமம் அல்லது ரிஷிகேஸ் ஆகிய இடங்களில் நடக்கக்கூடியது.

பயன்கள்

குருதேவருடன் இருப்பது,நேரடியாக அவரிடம் ஆசிபெறுவது. இதைவிடச் சிறப்பு உலகில் வேறு உண்டோ?



சஹஜ் சமாதி தியானம்




சஹஜ் சமாதி தியானம்
  • பெயருக்கு ஏற்றாற்போல், சிரமமேதுமின்றி, மிகவும் இயல்பாக மேற்கொள்ளக்கூடிய தியான முறை ஆகும்.
  • 18 வயதிற்குமேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம்
  • 3 நாட்கள்,தினமும் 2 மணிநேரம்

பயன்கள்
  • மனதை அமைதிப்படுத்தி,சாந்தம்,விழிப்புணர்வு,செயலில் கவனம் மற்றும் ஒழுங்கு ஆகிய நிலைகளை  இயல்பாகப் பேணக்கூடியது

DSN

DSN_Social_Transformation

DSN-(திவ்ய சமாஜ் நிர்மாண்/தெய்வீக சமுதாயம் அமைத்தல்)

பயிற்சியைப்பற்றி

  • வாழும்கலை பாகம்-1 பயின்றோர் கலந்து கொள்ளளாம்
  • உறுதியான,முழுமையான,திறன்வாய்ந்தமனிதனாகத் தன்னை மாற்ற விரும்பும் அனைவருக்கும்
  • அற்புதமான யோகாசனங்களின் வரிசையான பத்மசாதனாவைக் கற்றுக்கொள்ளலாம்
  • பயிற்சிக்காலம் 3 1/2 நாட்கள்
பயன்கள்
  • சமூகசேவை எவ்வளவு அழகானது,அற்புதமானது என உணரச்செய்கிறது
  • உங்களை உள்ளே நிறைவானவராகவும்,உதவும் மனமுடையவராகவும் ஆக்கும் அதேசமயம் வெளியில் இரும்பைப் போன்ற உறுதியானவராக ஆக்கவல்ல பயிற்சி
  • உங்களுக்கு நீங்களே வகுத்துக்கொண்ட எல்லைகளை உடைத்து, உங்களை சுதந்திரமானவராக,ஆற்றல் மிக்கவராக,பொறுப்பானவராக மாற்றக்கூடியது

ஸ்ரீ ஸ்ரீ யோகா


Sri Sri Yoga

யோகக்கலையின் உண்மையான,சரியான வடிவமே ஸ்ரீஸ்ரீ யோகா. யோகக்கலையில் உள்ள நுணுக்கங்களைம்,ஞானத்தையும் முழுமையாக ஒரு கொண்டாட்டத்துடன் கூடியவகையில் கற்றுக்கொடுக்கும் ஒரு பயிற்சிமுறைதான் ஸ்ரீ ஸ்ரீ யோகா

பயிற்சியைப்பற்றி

  • 5 நாட்களுக்கு தினமும் 2 மணிநேரம் நடைபெறக்கூடியது
  • உடலையும்,மனதையும்,ஆன்மாவினையும் நன்கு பேணவிரும்பும் எவரும் இப்பயிற்சியில் சேரலாம்

பலன்கள்

  • உடல்உள்ளுருப்புக்களுக்கு உறுதியையும் புத்துணர்வையும் கொடுக்கக்கூடியது
  • உடலின் வளையும் தன்மையை மேம்படுத்தக்கூடியது
  • தசைநார்களையும் எலும்புகளையும் உறுதியாக்கக்கூடியது
  • உடலுக்கு நல்லதொரு வடிவையும் ஒழுங்கையும் வழங்கக்கூடியது
  • செரித்தல்,ரத்தஓட்டம் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தக்கூடியது
  • நமது ஆற்றலைக் கூட்டுகிறது
  • உள்ளுணர்வை உயர்த்துகிறது


YLTP

YLTP


YLTP_Youth_Leadership_Training_Program


1999 ஆம் வருடம் தொடங்கப்பட்ட இப்பயிற்சித்திட்டம் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த திட்டமாகும்,இப்பயிற்சியானது இளைஞர்களின் மன இறுக்கத்தைப் போக்கி அவர்களை உற்சாகமான,தலைமைப் பண்புகளுள்ள, சாதனைகள்புரியக்கூடிய தலைவர்களாக மாற்றுவதோடல்லாமல் அவர்களை ஒன்றுபடுத்தி நமது கிராமப்புரங்களை முன்னேற்ற ஊக்குவிக்கிறது


தகுதி

  • 18 முதல் 30 வயதுவரை உள்ள இளைஞர்களுக்கானது (ஆண்,பெண்,இரு பாலருக்கும்)

பயிற்சித்திட்டம்

  1. YLTP-பகுதி 1,  இது பயிற்சியின் முதற்கட்டம், 10 நாட்களைக்கொண்டது,இதில் அடிப்படைப் பயிற்சியும் அடக்கம்
  2. களப்பயிற்சி-இளைஞர்கள் தங்களது சமுதாய திறன்களை செப்பனிட,3மாதங்கள்
  3. YLTP-பகுதி 2,இது பயிற்சியின் நிறைவுப்பகுதி 10 நாட்கள்
பயன்

இளைஞர்களைத்,தன்னம்பிக்கை உள்ளவர்களாக,பொறுப்பானவர்களாக,தலைமைப் பண்புள்ளவர்களக,சக்திவாய்ந்தவர்களாக மாற்றக்கூடிய பயிற்சி
இதில் 5H திட்டமும் அடங்கும்

நவ் சேத்னா ஷிவிர்

Vidharbha

கிராமபுரங்களில் இருக்கக்கூடிய எளிய மக்களுக்கான,எளிமையாகப் பயிலக்கூடிய பயிற்சி நவ் சேத்னா ஷிவிர் எனப்படும் புதியவிழிப்புணர்வுபயிற்சி ஆகும்.

5 நாட்கள் தினமும் 2மணி நேரம் நடக்கக்கூடிய இப்பயிற்சி, எளிமையானதுமட்டுமல்ல ஆற்றல்மிக்க மூச்சுப்பயிற்சி,எளிய தியானம் மற்றும் வாழ்க்கைக்குப் பயன்படத்தக்க ஞானத்தையும் உள்ளடக்கியது

கட்டணம் ஏதுமில்லா இப் பயிற்சி, மக்களிடையே ஒற்றுமை,அன்பு, அகியவற்றை நிறுவுவதன் மூலம், அமைதியான, சுத்தமான, அரோக்கியமான, தற்சார்புள்ள,மேம்பட்ட அளவில் மனித மாண்புகளைக் கொண்ட ஒரு சமுதாயத்தை நிறுவுகிறது

ஆர்ட் எக்ஸெல் பயிற்சி

Art Excel-All Round Training in Excellence

நாம் நமது குழந்தைகள் அனைவரும் வெற்றிகரமானவர்களாக விளங்கவேண்டும் என விரும்புகிறோம்,

வெற்றிகரமான குழந்தை என்றால் யார்?  

"மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, சூழ்நிலைகளோடு ஒத்திசையும் தன்மையுடைய, வாழ்க்கையில் தான் சந்திக்கும் சவால்களை திறம்பட எந்த ஒரு குழந்தை சமாளிக்கிறதோ அதுவே வெற்றிகரமான குழந்தை ஆகும்"
என்பது குருதேவரின் வாக்கு

 நமது குழந்தைகள் அனைவரையும் அத்தகைய வெற்றிகரமானவர்களாக  மாற்றுவதே ஆர்ட் எக்ஸெல் பயிற்சி

பயிற்சி பற்றி
  • யோகா மற்றும் மூச்சுப்பயிற்சிகள்
  • அச்சம் மற்றும் இறுக்கத்தைப் போக்கும் பயிற்சிகள்
  • மனம் ஒருமுகப்படுவதற்கான பயிற்சிகள்
  • தியானப் பயிற்சியோடு தலைமைப் பண்பு,நட்புணர்வு,குழுவாகச் சேர்ந்து செயல்படல் ஆகியவற்றுக்கான பயிற்சிகள், போன்றவற்றைக் கொண்டது
8 முதல் 13 வயதுவரையான அனைத்துதரப்பு குழந்தைகளுக்குமானது,விளையாட்டானதாகவும் செயல்முறை சார்ந்ததாகவும் அமைக்கப்பட்ட இப் பயிற்சி, அவர்களது தனித் திறனை மேம்படுத்துவதோடல்லாமல்,அவர்களுக்குள் இயற்கையாக உள்ள ஆற்றல் வெளிப்படவும் வழியமைத்துக் கொடுக்கிறது

YES- இளம் பருவத்தினருக்கான பயிற்சி

YES-Stress relief techniques for children


இளம் பருவத்தினருக்கு வாழ்க்கையில் நம்பிக்கையூட்டி அவர்களது வாழ்க்கைக்கு அவர்களைப் பொறுப்பேற்க தூண்டக்கூடியபயிற்சி. ஆற்றல்வாய்ந்த விளையாட்டுத்தன்மையுடன்கூடிய இப்பயிற்சி அப்பருவத்தினரின் மன இறுக்கத்தைப் போக்கி, கொந்தளிக்கும் அவர்களது உணர்வுகளைக் கையாளும் திறனை அவர்களுக்கு வழங்குகிறது


YES + பயிற்சி (18-30 yrs)

Teamwork_Yes_plus

சக்திவாய்ந்த இப்பயிற்சி, நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் திறனை இளைஞர்களுக்கு வழங்கும் பயிற்சி ஆகும்.

இப்பயிற்சி, சிறப்பானவகையில் பழமையும், நவீனமும் கலந்த கலவை ஆகும்.
          பழமையான  யோகா,பிராணாயாமா,தியானம்,ஞானம் போன்றவற்றுடன்  தற்காலத்திய கருத்துப்பரிமாற்றங்கள் இசை மற்றும் விளையாட்டுக்கள் போன்றவை அற்புதமாக இப் பயிற்சியில் கலந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் புகழ்பெற்ற சக்திவாய்ந்த சுதர்சனகிரியாவும் கற்றுத்தரப்படுகிறது.
மேலும் YES+  பற்றி தெரிந்து கொள்ள கீழ்காணும் பெயர்மீது க்ளிக் செய்யவும்

YES+ TV

15.10.11

ஆயுர்வேதா

Pulse Diagnosis

இந்தியாவின் பண்டைய ரிஷிகளால் உருவாக்கப்பட்ட இயற்கை சார்ந்த புனிதமான மருத்துவ முறை ஆயுர்வேதா. வாழ்வதற்கான அறிவியல் என்பதுதான் “ஆயுர்வேதா” எனும் பதத்தின் பொருள் (சமஸ்கிருதத்தில் ஆயுர் என்றால்,”நீண்ட ஆயுள்” அல்லது “வாழ்க்கை”.வேதா என்றால் “அறிவியல்”)


மற்ற மருத்துவ முறைகள், நோயைச் சமாளிக்கும் முறைகளில் கவனம் செலுத்துகின்றன. ஆனால் ஆயுர்வேதா, நோய்கள் வராமல்காக்கும் முறைகளைப் பற்றிய அறிவை வழங்குவதோடல்லாமல், ஒருவேளை நோய் கண்டுவிட்டால் அதற்கான மூலகாரணத்தைக் கண்டுபிடித்து, முற்றிலுமாக அதை குணப்படுத்துவதற்கான வழியையும் வழங்குகிறது.

அடிப்படைத் தத்துவம்

ayurveda spa treatment

சரக சம்ஹிதா, சுஸ்ருத சம்ஹிதா, அஸ்டங்க ஹிருதயம், போன்ற ஆயுர்வேத நூல்கள் சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு தொகுக்கப்பட்டன, அதுவறை இந்த ஞானம் வழிவழியாக ரிஷிகளால் அவர்களது மாணவர்களுக்கு வாய்மொழியாக வழங்கப்பட்டு வந்தது.

இப் பிரபஞ்சத்தில் காணப்படும் பஞ்ச பூதங்களான, பூமி, நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றால் நமது உடல் ஆக்கப்பட்டிருப்பதையும், இவை ஒருவரது உடலில் ஏற்படுத்தும் தாக்கங்களையும், இவற்றின் சமநிலை பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளையும் இந்நூல்கள் விளக்குகின்றன.

இந்த பஞ்சபூதங்களின் தனிப்பட்ட விதத்திலான கலவையால்தான் ஒவ்வொரு தனிமனிதனின் உடலும் ஆக்கப்பட்டுள்ளது. இக்கலவையானது மனிதருக்கு மனிதர் வேறுபடக் கூடியது. இந்த பஞ்சபூதங்களின் கூட்டமைப்பில் ஏதாவது ஒன்று மற்றவற்றைவிட அதிகமாக ஒவ்வொருவரின் உடலிலும் ஆதிக்கம் செலுத்தும் விதத்தில் அமைந்திருக்கும். இதை பிரகிருதி என ஆயுர்வேதம் கூறுகிறது.


 மூன்றுவிதமாக இந்த பஞ்சபூதங்களின் கூட்டமைப்பு அமைவதாக கூறும் ஆயுர்வேதம் அவற்றிற்கு தோஷங்கள் எனப் பெயறிட்டுள்ளது.


 அவை


 வாத தோஷம் – காற்றும்,ஆகாயமும் ஆதிக்கம் செலுத்தக்கூடியது.


பித்த தோஷம் – நெருப்பு ஆதிக்கம் செலுத்தக்கூடியது


 கப தோஷம் – நிலமும் நீரும் ஆதிக்கம் செலுத்தக் கூடியது

ஒருவரது உருவ அமைப்பையும், உடலின் செயல்பாடுகள் (உ-ம் ஜீரணம்), மனநிலை, உணர்ச்சிகள் ஆகியவற்றையும் இந்த தோஷங்களே நிர்ணயம் செய்கின்றன. உதாரணமாக கப தோஷ பிரகிருதி உடையவர்கள்,உறுதியான உடலமைப்பு, மெதுவாக செரிக்கும் தன்மை, சிறந்த ஞாபகசக்தி, உணர்ச்சிகளில் சமநிலை ஆகிய தன்மைகளைப் பெற்றிருப்பார்கள். பெரும்பாலானவர்களின் பிரகிருதி, இரண்டுவித தோஷங்களின் கூட்டமைப்பாகத்தான் இருக்கும்.

உடலில் ஏற்படும் நோய்களுக்குக் காரணம் இந்த தோஷங்களின் மாறுபாடுதான் என ஆயுர்வேதம் கூறுகிறது நமது உடலின் தோஷ கட்டமைப்பை அறிவதன் மூலம் அவற்றில் சமநிலையைப் பேணி உடல் நலனைக் காத்துக்கொள்ளமுடியும்.

“நாடி பரிக்ஷா” எனும் அற்புதமான முறையை ஆயுர்வேதம் நமக்கு அளித்துள்ளது. ஒருவரது மணிக்கட்டைப் பிடித்துப் பார்ப்பதன் மூலம் அவரது உடலில் ஏற்பட்டிருக்கும் தோஷமாறுபாட்டை ஆயுர்வேத மருத்துவரால் கண்டுபிடிக்கமுடியும். அதன் அடிப்படையில் வழங்கப்படும் சிகிச்சை நோயை முழுமையாக குணப்படுதக்கூடியதாக இருக்கும்.

ஆயுர்வேத வாழ்க்கை முறை

மருத்துவமுறை என்பதற்கு மேலாக அயுர்வேதம் நமக்கு அளிப்பது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைமுறை ஆகும். வரும் முன் காப்பதே இதன் நோக்கம். ஒருவரது உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறைக்கு ஆயுர்வேதம் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆரோக்கியத்தைப் பேண நமது உடலின் தன்மைக்கும், சுற்றுப்புரம் மற்றும் காலநிலைக்கும் தக்கபடி நாம் சாப்பிடக்கூடிய அல்லது தவிர்க்க வேண்டிய உணவுவகைகளையும், கடைபிடிக்கவேண்டிய அல்லது தவிர்க்க வேண்டிய பழக்க வழக்கங்களையும் (பத்தியம்), ஆயுர்வேத நாடிபரிக்ஷா மூலம் நாம் அறிந்துகொண்டு பயன்பெறலாம்.

சிகிச்சை முறைகள்

பொதுவாக கீழ்கண்டவற்றில் ஏதாவது ஒரு சிகிச்சைமுறை, நோய்க்குத் தக்கபடி மேற்கொள்ளப்படும்



· பஞ்சகர்மா – மூலிகை மருத்துவம், எளிய உணவு, எளிமையான உடற்பயிற்சி, உடலைப் பிடித்துவிடக்கூடிய சிகிச்சை, மற்றும் உடலை சுத்தமாக்கும் செயல்முறைகள் அடங்கிய சிகிச்சை முறை
ayurveda panchakarma

· உடலில் காணப்படும் தொஷங்களின் மறுபடுகளைச் சீர்செய்யக்கூடிய மூலிகை மருந்து சிகிச்சை
ayurveda wellness
ஆயுர்வேதம் பக்கவிளைவுகள் இல்லாத, ஒரு அற்புதமான மருத்துவ முறை ஆகும்.
இத்தகைய அற்புதமான முறையை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதற்காக பூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உருவாக்கியது ஸ்ரீஸ்ரீ ஆயுர்வேதா,
மேலும் அறிய கீழ்காணும் பெயர்மீது க்ளிக் செய்யவும்



12.10.11

அஷ்டாங்க யோகம் ஒரு அறிமுகம்


பொதுவாக தியானம் என்பது துறவிகளும், உலகவாழ்வில் பற்றில்லாதவர்களும், வயதானவர்களும் பயிலக்கூடியது எனும் கருத்து பரவலாக நிலவுகிறது. மேலும் தியானம் பயில்வதற்கு சிரமமானது எனும் கருத்தும் நிலவுகிறது. உண்மையில் தியானம், அனைத்து தரப்பு மக்களின் நல்வாழ்வுக்காக,எளிமையாகப் பயிலக்கூடிய விதத்தில் ஞானியர்களாலும் யோகியர்களாலும் வடிவமைத்து தரப்பட்டுள்ளது.

எல்லாக் காலங்களிலுமே தியானம் நம்நாட்டில் அனைவராலும் இறைவழிபாட்டோடு இணைத்து கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபங்களெல்லாம் அதையே உணர்த்துவனவாக அமைந்துள்ளன, கோவிலில் இறை தரிசனம் முடிந்ததும் சிறிதுநேரம் அமைதியாக அமர்ந்துவிட்டு செல்லும் வழக்கம் இதன் அடிப்படையில் தோன்றியதே ஆகும், இதை நாம் உணராமல் தியான மண்டபத்தை உணவுக்கூடமாக்கியதோடல்லாமல் அமைதியாக அமர்ந்து செல்வதையும் சடங்காக மாற்றி விட்டோம்.

ஒருவர் வாழ்க்கையை நல்லாவிதமாகவாழ முதலில் நம்மை அடுத்து இருக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்களிடம் நல்லவிதமான தொடர்பில் நாம் இருக்க வேண்டும், அடுத்து உறவினர்கள்,நண்பர்கள்,பிறகு சமுதாயம் என வரிசையாக நமது தொடர்பு எல்லை விரிந்து கொண்டே செல்கிறது ,இந்த அனைத்து உறவுகளையும் நாம் முறையாகப் பாராமரிக்க வேண்டும். யார் ஒருவர் இதை செம்மையாக செய்கிறாரோ அவரே வெற்றிகரமான மனிதராகிறார்.

இப்படி வெளிஉலகில் தொடர்புகளை பராமரிக்கும் செயல்முறையில் நாம் கடமை தவறி விடக்கூடாது ,தவறிழைத்துவிடக்கூடாது, அனைத்துக்கும் மேல் நாம் நமது ஆனந்தத்தையும் மன அமைதியையும் இழந்து விடக்கூடாது. இதுதான் இன்றைய வாழ்க்கைகயில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் ஆகும். இச்சவாலை சமாளித்து வெற்றிபெற அமைதியான மனமும், கூர்மையான புத்தியும் வேண்டும்.இவை இரண்டும் நல்ல ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் வாய்க்கும்.

ஆக நல்வாழ்வு என்பது நலமான உடல், தெளிந்த புத்தி,அமைதியான மனம் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. இவற்றைப்பெற நமக்கு யோகம் வேண்டும்.

யோகம் என்பது என்ன ?
யோகம் தர்சனங்களுள் ஒன்று,ஆனந்த வாழ்வை அளிக்கக் கூடியது.
யோகம் என்பது கீழ்கண்ட அங்கங்களை உடையது.


  1. இயமம்
  2. நியமம்
  3. ஆசனம்
  4. பிராணாயாமம்
  5. பிரத்யாகாரம்
  6. தாரணை
  7. தியானம்
  8. சமாதி

இதில் முதல் இரண்டும் புலனடக்கம்,மனக்கட்டுப்பாடு குறித்தவை.ஆசனம்,பிராணாயாமம்,ஆகியன பயிலக்கூடிய பயிற்சிகள்.பிரத்யாகாரம்,என்பது புலன்கள் அடங்குவது. தாரணை என்பது மனம் ஒருமுகப்படும் நிலை.தியானம் என்பது விழிப்புடன் கூடிய ஓய்வு.தியானத்தின் பயன் சமாதி,அதுதான் முழுமை,வார்த்தைகளால் விளக்கமுடியாத நிலை.

தியானம்பற்றி விவரமாக தெரிந்துகொள்ளவே இந்த விளக்கங்களெல்லாம் மற்றபடி இது ஒன்றும் சிக்கலான கடைபிடிப்பதற்கரிய விஷயம் அல்ல.
ஓரளவு புலனடக்கத்துடன், ஆசனங்களையும்,பிராணாயாமாவையும் பழகிவந்தால் சிறிது சிறிதாக முன்னேறி அனைவராலும் ஆனந்தமும் அமைதியும் பெற முடியும்.
இதன்பலன்


  • ஆரோக்கியமான உடல்
  • தெளிந்தமனம்
  • புத்திக்கூர்மை


உடல் மனம் புத்தி ஆகியன நன்றாக இருந்தால் வாழ்க்கை ஆனந்த மயமாகவும்,வெற்றிகரமானதாகவும் இருக்கும்.இதற்கும்மேலாக எதேனும் கிடைக்குமா? தொடர்ந்து பயின்று வாருங்கள் ஆச்சரியங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.