13.4.15

வாழும் கலை அறிமுகம்


வாழும்கலை அமைப்பானது பூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் 1981 ஆம் வருடம் தொடங்கப்பட்டது,வாழும்கலை அமைப்பானது இலாபநோக்கமில்லாத ஒரு மனிதநேய அமைப்பாகும். இவ்வமைப்பு அனைத்து தரப்பு மக்களும் வாழ்க்கையில், மன இறுக்கமின்றி மகிழ்ச்சியாக வாழவும்,துயர் துடைப்பு மற்றும் சமுதாய மேம்பட்டுப் பணிகளை நிறைவேற்றவும்,தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. வாழும்கலை அமைப்பானது உலகெங்கும் 151 நாடுகளில் ஆலமரமாகப் பரவியுள்ளது.

 "நாம் நமது மன இறுக்கத்தைப் போக்காமல் நமது சமுதாயத்திலிருந்து வன்முறையைக் களைய முடியாது,மன இறுக்கத்தை, சமுதாயத்தில் வன்முறையைப் போக்காமல் உலக அமைதி என்பதை அடையமுடியாது"
எனும் ஸ்ரீஸ்ரீ அவர்களின் வாக்குப்படி, ஒவ்வொரு தனி மனிதனும் மன இறுக்கத்திலிருந்து விடுபடும் விதமாகவும்,உள்ளார்ந்த அமைதியையும்,நிம்மதியையும்,ஆனந்தத்தையும் உணரும் விதமாகவும்  வாழும்கலை அமைப்பின் செயல்முறைகள் அமைந்துள்ளன.

வாழும்கலை அமைப்பின்: மன இறுக்கத்தைப் போக்கக்கூடிய மூச்சுப்பயிற்சி முறைகள்,தியானம் மற்றும் யோகா பயிற்சி மூலம் உலகமெங்கும் கோடிக்கனக்கான மக்கள், மன இறுக்கம்,விரக்தி மற்றும் வன்முறை எண்ணம் அகியவற்றிலிருந்து விடுபட்டு ஆனந்தம் அடைந்துள்ளனர்

வாழும்கலை அமைப்பானது, பேரிடர்கால உதவி, நீடித்த நிலைத்த கிராமப்புர வளர்ச்சித் திட்டங்கள்,பெண்களுக்கான மேம்பாட்டுத்திட்டங்கள், சிறைகளிலிருந்து விடுதலையடைந்தோருக்கான மறுவாழ்வுத் திட்டங்கள்,அனைவருக்கும் கல்வி திட்டம்,சுற்றுச்சூழல் பாதுகாப்புச் செயல்படுககள் ஆகியவற்றின் மூலமாக உலகெங்கும் அமைதியையும் வளர்ச்சியையும் பரவலாக்கி வருகிறது

துணை அமைப்புகள்

மேற்கண்ட இலக்குகளை அடையும் விதமாக்வாழும்கலை அமைப்பானது பல துணை அமைப்புகளைக் கொண்டுள்ளது அவை,

உலகளாவிய மனித மாண்புகளுக்கான கூட்டமைப்பு(I.A.H.V)
வேத் விஞ்ஞான் மஹா வித்யா பீத்(VVMVP)
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வித்யா மந்திர்(SSRVM)
வியக்தி விகாஸ் கேந்த்ரா இந்தியா(VVKI)




கே: அன்பான குருதேவா! ஒன்றும் செய்யாமல் இருப்பது நமக்கு இத்தனை இன்பத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்குமானால், நாம் ஏன் ஏதாவது காரியம் செய்ய வேண்டும்?

குருதேவர்: உன் இயல்பின் படி, நீண்ட நேரத்துக்கு ஒன்றும் செய்யாமல் இருக்க உன்னால் முடியாது. நிகழ்ச்சிகளின் வேறு பாட்டினை உணரும் போது தான் பரமானந்தத்தை அனுபவிக்க முடியும். நீ ஏதாவது காரியம் செய்யும் போது, 100 % முயற்சியோடு ஈடுபடும்போது தான் எதையும் செய்யாமல் இருப்பதின் மதிப்பை உணரலாம்.

பார்! நீ மிகவும் சுறுசுறுப்போடு ஓடியாடி வேலை செய்த பின்னால் தான் அயர்ந்த ஓய்வை அனுபவிக்கிறாய். நாள் முழுதும் ஒரு வேலையும் செய்யாமல் படுக்கையில் படுத்திருந்தால், இரவில் உன்னால் தூங்க முடியாது. அதனால் நீ செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வது அவசியம்.

நாம் செய்ய வேண்டிய வேலைகள் சில உண்டு. அந்த வேலைகளைச் செய்யும் போது, இடையில் ஒன்றும் செய்யாமல் இருக்கும் நிலைகளும் ஏற்படும்.

5.5.14

படைப்பும் படைத்தவனும்


இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரே சக்தியினால் ஆனது  பொதுவாக, ஒன்று உருவாக்கப்படும் போது, படைப்பவனும், படைக்கப்பட்ட பொருளும் வெவ்வேறாகும். உதாரணமாக, நீங்கள் ஒரு மெழுகுவர்த்தியை உருவாக்கும் போது, இந்த மெழுகுவர்த்தி என்னிலிருந்து வேறுபட்டது என்று நினைப்பீர்கள்.அதனை உங்களிடமிருந்து பிரித்து வைப்பீர்கள். இது என்னுடைய படைப்பு இது நானல்ல என்று நினைப்பீர்கள். இப்படித்தான் படைப்பவன் ஆகிய இரண்டும் வெவ்வேறானவை என்று மக்கள் நினைக்கின்றார்கள்.

ஆனால் கடவுள் எங்கும் நிறைந்திருப்பவர் என்று சொன்னால் அவர் படைக்கப்பட்ட அந்த பொருளுக்குள்ளும் இருக்க வேண்டும். எங்கும் நிறைந்தது என்று ஒன்று சொல்லப்படும்போது அதை விட்டு வெளியில் வேறொன்று இருப்பதற்கான இடம் எங்கே இருக்கின்றது?

நான் அனைத்து சக்திகளையும் உடையவன் என்றால், என்னைவிட சக்தி வாய்ந்த ஒன்று இருக்க முடியுமா? வாய்ப்பே இல்லை. படைப்பு, படைப்பாளி என்பவை  இருவேறு பொருட்கள் இல்லை. இருப்பது ஒரே பொருள்தான். இதனை எப்படி புரிந்து கொள்வது? நடனம், நடனமாடுபவர் என்ற உதாரணத்தை எடுத்துக் கொண்டால், நடனமாடுபவரிடமிருந்து  நடனத்தைப் பிரிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. நடனம் பார்க்கவேண்டுமென்றால் நடனமாடுபவரின் மூலமாகத்தான் பார்க்க முடியும்.

ஒரு ஓவியனும் அவன் வரைந்த ஓவியமும் வெவ்வேறானவை. ஒரு ஓவியன் ஒரு ஓவியத்தை வரைந்துவிட்டு அங்கிருந்து சென்று விடலாம். அப்பொழுதும் அந்த ஓவியம் அதே இடத்திலேயே இருக்கும். ஆனால் ஒரு நாட்டியக்காரர் நாட்டியத்தை விட்டு விலகிச் செல்ல முடியாது. எனவே  படைப்பு , படைப்பவன் என்பது நடனம், நடனமாடுபவர் போன்றது கடவுள் அல்லது அன்பு அல்லது  ஒளி என்று நம்மால் அழைக்கப்படும் சக்தி இந்த வையகம்  முழுவதும் பரவியுள்ளது. இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளிலும் ஊடுருவி உள்ளது.இதுவே நம் பண்டைய ஞானத்தின் சாரம் ஆகும். நவீன அறிவியல் விளக்குவதும் அதையே தான். இந்த உலகம் முழுவதும் ஒரே சக்தியினால் ஆனது. இந்த உண்மை தத்துவ ஞானிகளின் பற்பல புதிர்களுக்கு தீர்வளிக்கும். - குருஜி

4.5.14

தாந்திரிக பயிற்சிகளும் வாழும்கலையும்


அன்பு குருதேவ், நான் தாந்திரிக பயிற்சிகளில் ஈடுபடலாமா என்று தயவுசெய்து கூறுங்கள். பத்து வித மகாவித்தியாக்களில் ஒரு பயிற்சியை நான் கற்றுகொண்டிருக்கிறேன், நான் அதைச் செய்யலாமா?

குருதேவ்:

பாருங்கள், பத்து மகாவித்தியாக்களும் தெரிந்தவர்கள் வெகு சிலரே. எனவே அதைச் செய்வது தேவையில்லை. சற்றே தளர்ந்து மந்திர உச்சாடனங்களை கேளுங்கள். அப்படி பல ஒலிப்பதிவுகளை வாழும்கலை வெளியிடுள்ளன, அவை அனைத்தும் இதன் பகுதிகளே. சஹஜ் தியானத்தில் உங்களுக்கு தரப்படுபவை பீஜ மந்திரங்கள், சக்தி வாய்ந்தவை. 

பத்து மகாவித்தியாக்களையும் கற்றுத் தருவதாக யாராவது கூறலாம், ஆனால் அவை மிகச் சிக்கலானவை. அவர்களை நீங்கள் தூரத்திலிருந்து மரியாதை செய்யுங்கள் போதும்.

 பயிற்சிக்கு, இங்கே கற்றுத் தரப்பட்டவையே பெரிது. விரும்பினால், இங்கே நடக்கும் வேத பாட வகுப்புகளில் சேர்ந்து கற்றுக் கொள்ளலாம். 40 நாட்களில் இவற்றை நீங்கள் வெகுவாக புரிந்துகொள்ளலாம். இந்தியாவிற்கு வந்தால், அங்கே உபநயனம் செய்விக்கிறோம்,அதிலும் நீங்கள் மந்திரங்களை கற்றுக் கொள்ளலாம். ‘நான் இதைக் கற்றுத்தருகிறேன், அதைக் கற்றுத் தருகிறேன்,’ என்று பலர் கூறலாம், ஆனால் அவையெல்லாம் குழப்பத்தைத்தான் தரும்.

வாழும் கலை மற்றும் இஸ்லாம் மதம்


கேள்வி :

 சில சமயங்களில் வாழும் கலையில் இருந்து கொண்டு இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவதில் முரண்பாடுகள் இருப்பதாக உணர்கிறேன். விசேஷமாக “சிவ” அல்லது “ராம்” மந்திரங்களை உச்சரிக்கும் போது அப்படி உணர்கிறேன். துரதிஷ்டவசமாக இஸ்லாமிய மதம் கெட்ட பெயரைப் பெற்றிருக்கிறது.

குருஜி :

 இஸ்லாமிய மதத்தின் சரித்திரத்தை நீ அறிய வேண்டும். அது எப்படித் தோன்றியது  அந்த சமயத்தில் அதன் போதனைகளில் என்ன எழுதியிருந்தது? காலப்போக்கில் அதில் எப்படிப் பட்ட மாற்றங்கள் வந்தன என்பதை நீ அறிய வேண்டும். அப்போது என்ன சொல்லப்பட்டது? எதற்காக சொல்லப்பட்டது? தற்காலத்தில் அதில் எதை கடைப்பிடிக்க முடியும்? எதை கடைப் பிடிக்க முடியாது? அந்த காலத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட மிக அதிகமாக இருந்தது. அதனால் ஒரு ஆண் நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்ள அனுமதித்தார்கள். இப்போது அதைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

 அதே போல், ஒரு சமயம் முகமது நபி கம்பியுள்ள இசைக் கருவிகளை தூக்கி எறியச் சொன்னார். இசைக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் இன்று எந்த நாட்டில் இசைக்குத் தடை விதித்திருக்கிறார்கள் என்று சொல். இஸ்லாமிய நாடுகளில் இசைக்குத் தடை விதிக்கப்படவில்லை. ஆனால் சில தீவிர வாத இஸ்லாமியர்கள் “ இசை மற்றும் நடனத்தில் ஈடுபடுவது இஸ்லாமிய மதத்துக்கு எதிரானது. எனவே இஸ்லாமியர்கள் இசை, நடனத்தில் ஈடுபடக் கூடாது” என்று சொல்கிறார்கள்.

இரண்டாவதாக, இஸ்லாம் மதப்படி மனிதர்களின் முகத்தை புகைப்படம் எடுக்கக் கூடாது. இப்படி செய்வது மதத் துரோகமாக கருதப்படுகிறது. நீ சொல் புகைப்படம் எடுக்காமல் பாஸ்போர்ட் எப்படிக் கிடைக்கும்? அது நடக்கவே நடக்காது. என்னை பஹ்ரைன் நாட்டுக்கு அழைத்திருந்தார்கள். பஹ்ரைன் மன்னர் அவருடைய அரண்மனையில் ஏற்பாடு செய்திருந்த ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக என்னை அழைத்திருந்தார். அங்கு பல இஸ்லாமிய தலைவர்களுடன் உரையாடும் போது, அவர்கள் மதப்படி ஹஜ் யாத்திரையின் போது காபாவை (கறுப்புக் கல்) புகைப்படம் எடுப்பது மறுக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். இன்று பலர் தங்கள் கைபேசியில் உள்ள கேமராவின் மூலம் படம் பிடித்துக் கொண்டு செல்கிறார்கள். அவர்கள் காபாவின் புனிதக் கல்லை மட்டுமல்லாமல் தங்களையும் சேர்த்து செல்ஃபி படம் பிடித்துக் கொள்கிறார்கள்.

அதனால் தான் இஸ்லாமியக் கட்டடங்களில், மசூதிகளில் மனித முகமுள்ள சிலைகளையோ, ஓவியங்களையோ காண முடியாது. ஆனால் தற்காலத்தில் அப்படி இருக்க முடியுமா? சில இமாம்கள் தொலைக் காட்சிப் பெட்டிகளுக்கு எதிராக (டெலிவிஷன்) ஃபட்வா விதித்திருக்கிறார்கள். அவர்கள் மக்களிடம் சாத்தான் டெலிவிஷன் பெட்டிக்குள் புகுந்திருப்பதாக சொல்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் 5000 வீடுகளிலிருந்தவர்களை தங்கள் டெலிவிஷன் பெட்டிகளை ஒரு பொது இடத்துக்குக் கொண்டு வந்து குழி தோண்டிப் புதைக்கச் சொன்னார்கள். கல்லை விட்டெறிந்து அதற்குள் புகுந்திருந்த சாத்தானை விரட்டச் சொன்னார்கள். ஏனென்றால் மனித முகத்தைப் பார்ப்பது இஸ்லாமிய மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது.

எனவே இன்றைய காலகட்டத்தில் இஸ்லாம் என்ன நிலையில் இருக்கிறது? இஸ்லாம் மதத்தின் நோக்கம் என்னவாக இருந்தது? இரண்டுக்கும் இடையில் இருக்கும் தூரம் அதிகமாகி விட்டது.

இஸ்லாமிய மதக் கொள்கைப்படி, இஸ்லாமிய மதத்தைச் சேராதவர்கள், அல்லாவை நம்பாதவர்கள் உயிரோடு இருக்க உரிமையற்றவர்கள் என்று சொல்கிறார்கள். அதனால் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிர வாதிகள் இஸ்லாம் மதத்தைத் சேராதவர்களை கொன்று குவிப்பதில் ஈடுபடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை இஸ்லாமியர்களில் ஒரு பிரிவான சூஃபி இனத்தை சேர்ந்த புனிதர்களும் கெட்டவர்கள். ஏனென்றால் அவர்கள் இசையை விரும்புகிறார்கள். மந்திரங்களை ஜபிக்கிறார்கள். ஒரு சூஃபி புனிதர் இறந்த பின் அவர் உடல் அடக்கம் செய்த இடத்தில் சமாதி கோயில் கட்டுவது இஸ்லாமிய மதத்துக்கு எதிரான செயலாகக் கருதுகிறார்கள். முகமது நபியின் சமாதியையும் அவ்வாறே அழித்து விட்டார்கள். ஏனென்றால் இஸ்லாமிய மதப் படி சமாதி கோயில் கட்டக் கூடாது. எனவே ஷியா பிரிவினரையும் தங்கள் மதத்தில் சேர்ப்பதில்லை. ஏனென்றால் ஷியா பிரிவினர் சமாதி கோயில் கட்டி வழிபடுவதை நம்புகிறார்கள். சமாதி கோயில்களை கௌரவிக்கிறார்கள்.

எனவே இப்படிப் பட்ட கருத்து வேறுபாடுகளால், இஸ்லாமிய மதத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. இஸ்லாமிய மதச் சட்டப்படி திருடுபவர்களின் கைகளை வெட்டி விட வேண்டும். ஒரு குழந்தை ஒரு பொருளை திருடிவிட்டால், கைகளை வெட்டுவதை கற்பனையில் பாருங்கள். திருடுபவரின் கைகளை வெட்டுவது சரியாகுமா? ஒரு குழந்தையின் கைகளை வெட்டலாமா? இசையை அனுமதிக்கக் கூடாது. புகைப்படம் எடுக்கக் கூடாது. இப்படி சட்டங்களை இன்றைய காலகட்டத்தில் பின்பற்ற முடியுமா?

 எத்தனையோ விதமான மக்கள் இவ்வுலகில் வாழ்கிறார்கள். எல்லோரையும் அனுசரித்து வாழ வேண்டும். தீவிரவாத இஸ்லாமியரின் கொள்கைகளால் மற்ற எல்லா இனத்தவர்களோடும் முரண்பாடுகள் / பிரச்சினைகள் உருவாகின்றன. இஸ்லாமிய மதப்படி மற்றொரு கருத்து இருக்கிறது.நாம் பல்வேறு வகையான இனத்தவர்களை உருவாக்கியிருக்கிறோம். பல்வேறு வகையான ஞானம் உள்ளது. இவற்றையெல்லாம் நாம் கௌரவிக்க வேண்டும். மதிக்க வேண்டும். இது முகமது நபியால் சொல்லப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவில் ஒரு ஆசிரியர் வாழும் கலைப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். சுதர்சன கிரியா பயிற்சிக்கு முன்பு நாம் “ஓம்” மந்திரத்தை மூன்று முறை சொல்கிறோம். வகுப்பிலிருந்த ஒருவர் “ஓம்” என்று சொல்ல மறுத்தார். ஏனென்றால் அப்படிச் சொல்வது அவருடைய மதக் கொள்கைக்கு எதிரானது என்றார். ஆசிரியர் அவரைப் பார்த்து,“உன் மதம் அவ்வளவு வலுவிழந்ததா நீ “ஓம்” சொல்வதால் உன் மதத்தை விட்டு விலக்கப்படுவாயா? “ என்று கேட்டார். “ நான் அப்படி நினைக்கவில்லை. நான் “ஹாலுலூயா” என்றும் “அல்லா ஹூ அக்பர்” என்றும் அல்லது “புத்தம் சரணம் கச்சாமி” என்று சொன்னாலும் என் மதத்தைப் பின் பற்ற முடியும். என் மதத்துக்கு உரிய கௌரவத்தை நான் அளிக்கிறேன் “ என்று சொன்னார். இந்த வார்த்தைகளைக் கேட்டு அந்த பயிற்சி பெற வந்தவருடைய கண்கள் திறந்தன. (அவர் ஆசிரியரின் சொற்களை ஏற்றுக் கொண்டார்) “ஓம்” என்று சொல்வதால் உனக்கு ஒரு நஷ்டமும் வராது. லாபமே கிடைக்கும்.

அதே போல் கிற்ஸ்த்மஸ் கரோல் பாடுவதால் நீ கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப் பட மாட்டாய். கிறிஸ்தவப் பாடலை நீ பாடுவதால் உன் கடவுள் உன் மேல் கோபமடைய மாட்டார். அதே போல் நீங்கள் பஜனை பாடுவதால் உங்கள் கடவுள் உங்களை தண்டிக்க மாட்டார். “சிவா” என்றால் என்ன எது மிக அழகாக இருக்கிறதோ, அன்பே உருவானதோ, நன்மை அளிக்கிறதோ அதை “சிவா” என்றழைக்கிறோம். “நாராயணா” என்றால் என்ன ? நம் நரம்பு மண்டலத்தில் உள்ள சக்தியை, படைப்பின் சக்தியை “நாராயணா” என்றழைக்கிறோம். ஜீவன்களில் ஒளி விடும் உயிர் சக்தியை “நாரயணா” என்று சொல்கிறோம். நரம்பு மண்டலம் (நர்வஸ் ஸிஸ்டம்) என்ற சொல் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்த “நர” என்ற வார்த்தையிலிருந்து வந்தது. “நரர்” என்றால் மனிதர்கள் என்றும் அர்த்தமாகிறது.

இந்த அழகான, பிரமிப்பூட்டுகிற, ஆச்சரியமான நரம்பு மண்டலத்தில் குடியிருப்பவரை “நாராயணன்” என்று சொல்கிறோம். நரம்பு மண்டலமில்லாத மனிதனைக் கற்பனை செய்து பாருங்கள். அப்படிப் பட்ட மனிதன் உயிரோடு இருக்க முடியாது. நரம்பு மண்டலம் வேலை செய்வதால் மட்டுமே நீ உன்னை வெளிப்படுத்த முடிகிறது. இந்த பிரபஞ்சம் முழுவதிலும் இருக்கும் சக்தியையே (தன்னை உணர்ந்து வெளிப்படுத்திக் கொள்ளும் சக்தியையே) “நாராயணன்” என்று சொல்கிறோம். மற்ற மொழிகளில் பாடுவதோ, மற்ற கலாசாரங்களைப் பின்பற்றிப் பாடுவதோ, எந்த இனத்தவரின் கடவுளுக்கும் எதிரானது அல்ல. அப்படி நினைப்பது தவறாகும். ஆனால் தீவிர மதவாதிகள் அவ்வாறு நினைக்கிறார்கள். மற்றவர்களுக்கும் அவ்வாறே பயிற்சி அளிக்கிறார்கள். நீ மற்ற மதத்தினரின் கடவுள்களின் பெயரைச் சொல்வதால் உன் மதத்துக்கு துரோகம் செய்வதாக நம்ப வைக்கிறார்கள்.

இன்று இந்த இடத்துக்கு வருவதற்கு முன் ஈராக்கில் நடந்த தற்கொலை கார் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தைப் பற்றி செய்தித்தாளில் படித்தேன். மக்கள் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட மனித வெடிகுண்டு (தற்கொலைப் படை) வெடிக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. பலர் உயிரிழக்கிறார்கள். அமைதியின் பெயரால் பல வன்முறைச் சம்பவங்கள் பாகிஸ்தானில் நிகழ்கின்றன.

இஸ்லாம் என்றால் அமைதி என்று அர்த்தம். ஆனால் இன்று இஸ்லாம் என்ற பெயரில் மிக அதிகமாக, கற்பனை செய்ய முடியாத வன்முறைச் செயல்கள் நடைபெறுகின்றன.

ஈராக்கில் யஸ்டி இனத்தவர்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக தங்கள் கலாசாரத்தைப் பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள். தற்சமயம் அவர்கள் பல கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள். பெரிய அளவில் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் அல்லாவுக்கு எதிரானவர்கள் என்று பிரசாரம் செய்யப் படுகிறது. அது உண்மை என்றால் எல்லாம் வல்ல அல்லா அவர்களை ஏதாவது செய்திருப்பார். (இத்தனை ஆண்டுகள் வாழ விட்டிருக்க மாட்டார்) அவர்களை டினாசௌர் என்ற மிருக வர்க்கத்தை அழித்தது போல் அழித்திருப்பார். கடவுளுக்காக நாம் அந்தக் காரியத்தை செய்யத் தேவையில்லை. கடவுளை அவருடைய வேலையை செய்யவிடுவோம். நம் வேலையை செய்வோம்.மதத்தின் பெயரால் இவ்வளவு வன்முறைகள்  நடைபெறுவது மிகவும் துரதிஷ்டவசமாகும். எனவே மதங்களுக்கிடையே  உள்ள தடுப்பு சுவர்களை உடைக்க வேண்டும்.

இஸ்லாமிய மதத்தில் பல சிறந்த விஷயங்கள் உள்ளன. உதாரணத்துக்கு எல்லோரும் சமம் என்று நம்புவது. எல்லோரும் இணைந்து பிரார்த்தனை செய்வது. – பிரார்த்தனையில் எல்லா மக்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த சிறந்த விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, பிரிவினை வாதம், வன்முறை, பல்வேறு இனங்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகள் முதலிய விஷயங்களைக் கைவிட வேண்டும். என் மதம் உயர்ந்தது,மற்ற மதங்கள் தாழ்ந்தவை என்ற கருத்து சரியானதல்ல. நான் சொல்கிறேன். இஸ்லாமியர்களில் பல ஞானிகள் உள்ளனர். இந்த பூமியில் பல நல்ல இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். சில தீவிர மதவாதிகளால், வன்முறையாளர்களால் இஸ்லாமிய மதத்துக்கு மிகவும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இது துரதிஷ்டவசமானது.


முகமது நபியின் மனைவி பாத்திமா என்றும் புர்கா அணிந்ததில்லை. ஹிஜாப் என்ற உடையையும் அணிந்ததில்லை. அவருக்கு எல்லா விதமான (ஆண்களுக்குச் சமமாய்) அதிகாரங்களும் கொடுக்கப் பட்டது. பிற்காலத்தில் பெண்களுக்கிருந்த அதிகாரம் (உரிமைகள்) ஆண்களால் பறிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். தற்காலத்தில் பெண்களை அடிமையாக நடத்தக் கூடாது.


10.6.13

காயத்ரி மந்திரத்தின் சிறப்பு


ஆதி சங்கராசார்யார், எல்லா ஆன்ம ஞான விஷயங்களையும் கூறிவிட்டு, இறுதியாக "ஒ சிவா,நீயே நான் நானே நீ! சிவோஹம்! (நான் சிவம்) என்கிறார்.

ஆத்மாத்வம்- ஆத்மன் என்பது சிவம்.மற்றும் நமது அறிவு என்பது சக்தியின் வடிவம். அறிவு மூன்று வகைப்படும்.சாத்விக், ராஜசிக், மற்றும் தமசிக் - அதாவது சாத்வீக குணம், ராஜத குணம், மற்றும் தமோகுணம் ஆகியவற்றால் நமது அறிவு ஆளப்படுதலே ஆகும். சுருக்கமாக, ஒருவனது ஆத்மா சிவம்,அறிவு சக்தியாகும். வாழ்கை அறிவின் வழியே நிர்ணயிக்கப்படுகிறது. தமோகுணம் உடைய  அறிவு, காளி ஆகி  சிவனை அதாவது ஆத்மாவை வெற்றிகொண்டு அழிவுப்பாதையில் நடத்திச் செல்கிறது. சாத்விக் குணமுடைய அறிவு சரஸ்வதி , ஞானம், தெளிவான சிந்தனை ஆகியவற்றுடன் கூடியதாகிறது. ராஜச்விக் குணமானது லக்ஷ்மி ரூபமாகி செல்வம் செழிப்பு ஆகிவற்றுடன் கூடியதாகிறது. புத்தி எப்படி செயல்படுகிறதோ அதன் படியே வாழ்கைப் பாதை செல்கிறது.


எதிர்மறை எண்ணங்கள் அதிகம் உள்ள மனிதர்களை நாம் காண்கிறோம். பிறரிடம் குறை காண்பது, ஒருவர் சிறப்பாக செயல்பட்டாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பது, இவை தமசிக் இயல்புகளைக் குறிக்கும். இவை அழிவுக்கான இயல்புகளாகும். ராஜச்விக் குணம் என்பது எப்போதும் 'இது வேண்டும் அது வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டே இருக்கும் இயல்புடயதாகும்.இந்த இயல்புடையவர்கள் எல்லாவற்றையும் அடைவதற்கான முயற்சிகளிலேயே ஈடுபட்டுக் கொண்டிருப்பர். இதற்கு தாமும் செயல்பட்டு, பிறரையும் வேலை வாங்கி கொண்டிருப்பர். சாத்விக் குணமுடையவர்கள் திருப்தியோடும் அமைதியோடும் மகிழ்ச்சியோடும் மற்றவர்களை ஆதரித்து உதவிக்கொண்டும், அவர்களுக்கு மகிழ்வூட்டி கொண்டும் ஞானத்துடன் வாழ்வர்.

ஆதிசக்தியின் மூலாதார வடிவமான காயத்ரி என்பது இந்த மூன்று குணங்களையும் தாண்டி செல்லும் வல்லமையுடையது. அதனால் தான் நாம் அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட தெய்வீக
சக்தி, நம்மை வழிநடத்த வேண்டும் என்று காயத்ரி மந்திரத்தை ஜபிககிறோம்.

முதலில் தமோ குணத்தில் இருந்து வெளி வர , ரஜோ குணமான செயல்களில் ஈடுபடுகிறோம். பின்னர் செயல்பாடுகளிருந்து வெளிவந்து சத்விக் குணத்தை அடைகிறோம். அதையும் தாண்டி, ஆழ்ந்த விழிப்புணர்வையும் பேரின்பத்தையும் அடைகிறோம். இதுவே காயத்ரி மந்திரம்,குறைகள், குற்றங்கள் அனைத்திலிருந்தும் விடுவித்து, அனைத்துத் துன்பங்களையும் நீக்கும் வல்லமை யுள்ளது. அதை ஜெபிக்கும் போது தடைகள் அனைத்திலும் இருந்து விடுபடுகிறோம்.

இது ஒரு நச்சு வட்டம். தமோ குணத்தில் இருந்து ரஜோ குணம் எனும் வட்டத்திற்கு சுழன்று வருகிறோம். பின்னர் ரஜோ குணத்தில் இருந்து சத் குணத்திற்கு செல்ல முயல்கிறோம் அந்த முயற்சியில் சில சமயம் மீண்டும் ரஜோ குணத்திற்கே வந்து விடுகிறோம். ரஜோ குணத்துடன் அதிக செயல்பாடுகளில் ஈடுபடும் போது தமோ குணத்திற்கே மீண்டும் வந்து விடுகிறோம். ஆக, மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்து  முயற்சிக்கிறோம். இதற்குக் காரணம் "நான்" என்கிற அகந்தை. இது மிக நுண்ணியமான ஒன்று. இந்த அகந்தையை ஒடுக்கவே காயத்ரி மந்திரம் கூறுகிறோம். "தியோ யோ  ந பிரஜாதயாத் " இதன் பொருள்' அறிவை நல்வழியில் நடத்தி வழிகாட்டவும்" என்பதாகும்.காயத்ரி மந்திரத்தின் மூலம் நமது அறிவு, குற்றங்கள், குறைகள், எதிர்மறை எண்ணங்கள் இவற்றிலிருந்து விடுபட்டு "பிராமதேஜோ" பிரம்மனை போல் ஒளி வீசுவதாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

இந்த பிரார்த்தனை மூலம் நம் அனைவரின் அறிவும் நல்வழியில் நடத்தப்பட்டு ஒளியுடன் இருக்கட்டும் என்று வேண்டுகிறோம். யாராவது ஒருவர் எதிர்மறை எண்ணங்களுடன் இருந்தால் அவருடன் இருக்கும் நமக்கும் அத்தகைய எண்ணங்கள் பரவக்கூடும் அல்லவா? எத்தனை பேர் இதை உணர்ந்திருக்கிறீர்கள்? கை தூக்குங்கள் ! ஆம் ! எதிர்மறை எண்ணங்களுடைய ஒருவருடன் இரவும் பகலும் இருந்தால் நமக்கும் பரபரப்பும், அமைதி இன்மையும், ஏற்படும். அனைத்து மக்களுக்கும் அறிவு எதிர்மறை எண்ணங்களிருந்து விடுபட்டு நல்வழியில் செலுத்தப்பட  வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். 'பார்கோ தேவஸ்ய தீமஹி ' அதாவது தீயவை அனைத்தும் அழிக்கப் படட்டும் ' தெய்வீக சக்தியிடம் நமது அனைத்து குற்றங்களும் அழிக்கப்பட்டு அறிவு நல்வழியில் செலுத்தப்படட்டும் என்று பிரார்த்திக்கிறோம். இது மிக அழகானது அல்லவா?

ஒவ்வொரு நாளும் நல்ல விஷயங்கள் மட்டுமே நமது அறிவை அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். "சப்கோ சன்மதி தே பகவான் ' என்று- ஒவ்வொருவருக்கும் நல்அறிவு, நேர்மையான சிந்தனைகள் ஏற்பட்டு இறையருளின் ஒளி வீசவேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாகும். என்ன பிரார்த்தனை செய்து கொள்கிறோமோ அது நிகழ ஆரம்பிக்கும்.

1.1.13

மரணத்திற்குப்பின்?



கேள்வி : மரணத்திற்குப்பிறகும் வாழ்க்கை உள்ளதா? 7 பிறவிகள் என்று சொல்லப்படுகிறதே அவை மனிதப்பிறவியோடு முடிவடைந்து விடுகிறதா? அல்லது அதற்குபிறகும் தொடருமா?

குருஜி :  மரணத்திற்குப்பிறகும் வாழ்க்கை உண்டு. நாம் திரும்பவும் வரவேண்டி இருக்கலாம்!  தொடர்ந்து மீண்டும் மீண்டும் வந்துகொண்டும் இருக்கலாம். அது எத்துனை முறையாக வேண்டுமானாலும் இருக்கலாம், 7 ஆகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை.